2,150 கிலோ கழிவு தேயிலை தூளுடன் கம்பளையில் ஒருவர் கைது!

2 ஆயிரத்து 150 கிலோ கழிவு தேயிலை தூளை ஏற்றிச்சென்ற லொறியை சுற்றிவளைத்த கம்பளை, வெலம்பொட பொலிஸார், சாரதியை கைது செய்ததுடன், லொறியையும் கைப்பற்றினர்.

தவுலகலயில் இருந்து வெலம்பொட பகுதிக்கு கழிவு தேயிலை தூள்களை ஏற்றிச்சென்ற லொறியே பிலப்பிட்டிய பகுதியிலை வைத்து இவ்வாறு மடக்கிப்பிடிக்கப்பட்டது.

வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த சுதசிங்கவின் வழிகாட்டலுடன் உப பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள சேனாரத்தின, பொலிஸ் உத்தியோகத்தர்களான பண்டார ( 47242 ), திலங்காவல (60415 ) ஆகியோரே, கழிவு தேயிலைத் தூள் கடத்தலை முறியடித்துள்ளனர்.

லொறியின் சாரதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles