பசறை படல்கும்புர வீதியின் கமவெல பகுதியில் 3000 மில்லிகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கமவெல சந்தியில் பொலிஸாரின் அமைக்கப்பட்டுயிருந்த சோதனை சாவடியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரினால் குறித்த வீதியின் ஊடாக சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது முச்சக்கர வண்டி சாரதியின் கால்சட்டை பையில் வைத்திருந்த கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
அத்தோடு பதுளை கந்தகொல்ல பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கஞ்சா படல்கும்புர பகுதியில் இருந்து கொண்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.










