270 பேரை பலியெடுத்த ஏர் இந்திய விமான விபத்துக்கான காரணம் வெளியானது!

 

ஏர் இந்​தியா விமான விபத்​துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரண​மாக இருக்​கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரி​வித்​துள்​ளார்.

டிசிஎம்ஏ என்​பது போயிங் விமானத்​தின் தொழில்​நுட்ப கோளாறுகளை கண்​டறி​யும் மென்​பொருள் ஆகும்.

கடந்த ஜூன் 12-ம் திகதி குஜ​ராத்​தின் அகம​தா​பாத் விமான நிலை​யத்​தில் இருந்து பிரிட்​டிஷ் தலைநகர் லண்​ட​னுக்கு புறப்பட்ட ஏர் இந்​தியா விமானம் 2 நிமிடங்​களில் கீழே விழுந்து நொறுங்​கியது. இதில் 241 பேர் உயி​ரிழந்​தனர். பிரிட்​டனை சேர்ந்த விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்​டும் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் பிழைத்​தார்.

இந்த விமானம் அரசு மருத்​து​வக் கல்​லூரி​யின் மாணவர் விடுதி மீது மோதி​யதால் 29 பேர் உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்​த​மாக அகம​தா​பாத் விமான விபத்​தில் 270 பேர் உயி​ரிழந்​தனர்.
இந்த விபத்து தொடர்​பாக விமான விபத்து புல​னாய்வு அமைப்​பின சிறப்​புக் குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது.

இதில் இந்​திய விமானப் படை​யின் மூத்த விமானிகள், அமெரிக்க தேசிய பாது​காப்பு வாரி​யத்​தின் தொழில்​நுட்ப வல்​லுநர்​கள், ஐ.நா. சபை​யின் சர்​வ​தேச விமான போக்​கு​வரத்து கழகத்​தின் வல்​லுநர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர்.

விமானத்​தின் கருப்பு பெட்​டி​யில் இருந்து பெறப்​பட்ட தகவல்​கள், உயிர் பிழைத்த பயணி​யின் சாட்​சி அடிப்​படை​யில் சிறப்பு குழு முதல் கட்ட விசா​ரணை நடத்தி விமான போக்​கு​வரத்து துறை​யிடம் சில நாட்​களுக்கு முன்பு சமர்ப்​பித்தது.

அந்த அறிக்​கையை அடிப்​படை​யாக வைத்து அமெரிக்​காவை சேர்ந்த வால் ஸ்டிரீட் ஜர்​னல் நாளிதழ் வெளியிட்ட சிறப்பு செய்​தியில் ,
‘ அவசர நிலை காலத்​தில் விமானத்​தின் இன்​ஜின்​கள் அணைக்​கப்​பட்​டு, மீண்​டும் இயக்​கப்​படு​வது வழக்​கம். இதற்​காக விமானத்​தின் பெட்​ரோல் சுவிட்​சுகளை விமானிகள் அணைத்​து, மீண்​டும் இயக்​கு​வார்​கள்.

அகம​தா​பாத்​தில் விபத்​துக்​குள்​ளான ஏர் இந்​தியா விமானத்​தின் பெட்​ரோல் சுவிட்​சுகள் அணைக்​கப்​பட்​டு, இரு இன்​ஜின்​களும் செயல் இழந்​துள்​ளன. இதுவே விபத்​துக்கு காரண​மாக இருக்​கக்​கூடும்.” – என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்து ஏற்​பட்ட ஒரு மாதத்​துக்​குள் முதல் கட்ட அறிக்​கையை பொது தளத்​தில் வெளி​யிட வேண்​டும். இதன்​படி ஏர் இந்​தியா விமான விபத்து தொடர்​பான முதல்​கட்ட அறிக்கை இணை​யத்​தில் வெளி​யிடப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles