3000 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவை

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் 3,000 மில்லியன் ரூபா அளவிலான மின் கட்டணம் நிலுவையிலுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சினூடாக இலங்கை மின்சார சபைக்கு செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனெவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 5 மாதங்களில் கொழும்பு தேசிய வைத்தியசாலையினால் 339 மில்லியன் ரூபா வரையிலான தொகை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles