31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றபோதும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மின்சார தடை போன்ற காரணங்களால் தகவல்களை உறுதிப்படுடுத்துவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா வலப்பனை கொத்மலை மதுரட்ட ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம நிலையத்தால் மண்சரிவிற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் பிரதான பாதை முற்றாக நீரிழ் மூழிகியுள்ளமை காரணமாக வைத்தியசாலைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதிலும் வைத்தியர்கள் தமது கடமைக்கு திரும்புவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இருந்த போதிலும் வைத்திசாலையின் சேவைகள் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பல நகரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நுவரெலயிh நகரம் 1994 ஆம் ஆண்டு நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பிடம் என்பன நீரிழ் மூழ்கியது.

அதனைத் தொடர்ந்து இன்று 27.11.2025 நுவரெலியா நகரின் பிரதான வீதி பஸ்தரிப்பு நிலையம் உட்பட நுவரெலியா நகரம் முற்றாக செயல் இழந்துள்ளதுடன் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.இது தவிர ஆவெலியா வைத்தியசாலை பகுதி மகிந்த மாவத்தையின் ஒரு பகுதி எதிரிசிங்க மாவத்தையின் ஒரு பகுதி குதிரைப்பந்தய திடல் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மாகாஸ்தோட்ட மூன்பிலேன் நேஸ்பி பம்பரகலை போன்ற பகுதிகளிலும் பாரிய அளவில் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடுகள் விவசாய நிலங்கள் விவசாய பயிர்கள் என்பன முற்றாக சேதமடைந்துள்ளது.

பிரதான பாதைகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலை நுவரெலியா கண்டி பிரதான பாதையில் கெரன்டி எல்ல பகுதியில் முன்னெச்சரிக்கை காரணமாக பாதை மூடப்பட்டுள்ளதுடன் ஒரு சில இடங்களில் மண்சிரிவுகள் ஏற்பட்டுள்ளன.இதன் காரணமாக நேற்று நுவரெலியா கொழும்பு நுவரெலியா கண்டி பகுதிகளுக்கான பேருந்துகள் மிக குறைந்த அளவிலேயே சேவையில் ஈடுபட்டன.
குறிப்பாக தனியார் சொகுசு பேருந்துகள் முற்றாக சேவையில் இடுபடவில்லை.அதே நேரம் இரயில் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு பதுளை இரயில் போக்குவரத்து நானுஒயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வலப்பனை ஹங்குரன்கெத்த உடபுஸ்ஸல்லாவ இராகலை கந்தப்பளை ஹபொரஸ்ட் போன்ற பகுதிகளிலும் பாதைகள் சேதமடைந்துள்ளமை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தேவையான ஏற்பாடுகளை செய்துவருவதுடன் அரசசார்பற்ற நிறுவனங்களும் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.அதே நெரும் சேத விபரம் தொடர்பாக முழுமையான அறிக்கை ஒன்றை தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலையில் வழங்க முடியாது எனவும் தகவல்கள் தற்பொழுது திரட்டப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த பாரிய அனர்த்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலங்களும் விவசாய பயிர்களும் முற்றாக நீரிழ் மூழ்கியுள்ள நிலையில் எதிர்வரும் வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கலாம் அல்லது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விவசாய திணைக்களம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிப்பு தொடர்பாக உரிய முறையில மதிப்பீடு செய்யப்பட்டு அதற்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றார்கள்.

நுவரெலியா  நிருபர்  எஸ்.தியாகு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles