36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300 ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா!

இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்று கடந்த 7-ம் திகதிபயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், அதற்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பதிலடி குறித்தும் விளக்கம் அளித்தனர்.

கர்னல் சோபியா குரேஷி கூறும்போது, “மே 7 மற்றும் 8-ஆம் திகதி இரவு, இந்திய ராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கில், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியை பல முறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஏவியது. 36 இடங்களை தாக்க முயற்சிப்பதற்காக சுமார் 300 முதல் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியது. இந்திய ஆயுதப் படைகள் இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த ட்ரோன்களில் பலவற்றை சுட்டு வீழ்த்தின.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கும் நோக்கிலும், உளவுத் தகவல்களை சேகரிக்கும் நோக்கிலும் பாகிஸ்தான் இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் குறித்து தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப அறிக்கைகளின்படி, அவை துருக்கி நாட்டின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் என்பது தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார்.

விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், “பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்கள் மீது ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஏவப்பட்டன. அவற்றில் ஒன்று பாகிஸ்தானின் ஏடி ரேடாரை அழித்தது. கனரக பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பீரங்கித் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதன் விளைவாக இந்திய ராணுவ வீரர்களுக்கு சில இழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன. இந்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவமும் பெரும் இழப்புகளைச் சந்தித்தது.

மே 7-ஆம் திகதி இரவு 08:30 மணிக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய போதிலும், பாகிஸ்தான் அதன் சிவில் வான்வெளியை மூடவில்லை. இந்தியா மீதான அதன் தாக்குதல் விரைவான வான் பாதுகாப்பு பதிலடியைத் தரும் என்பதை முழுமையாக அறிந்த பாகிஸ்தான் சிவில் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சர்வதேச எல்லை அருகே பறந்து கொண்டிருந்த சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்துக்கு இடமில்லாத சிவில் விமானங்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. எங்கள் அறிவிக்கப்பட்ட மூடல் காரணமாக இந்தியப் பக்கத்தில் உள்ள வான்வெளி சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து முற்றிலும் விலகி உள்ளது.

இருப்பினும், கராச்சி மற்றும் லாகூர் இடையே விமானப் பாதையில் பறக்கும் சிவில் விமான நிறுவனங்கள் உள்ளன. இந்திய விமானப்படை தனது பதிலடியில் கணிசமான நிதானத்தைக் காட்டியது. இதனால் சர்வதேச சிவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது” என தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles