ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான பதவியேற்பு நிகழ்வு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
38 புதிய இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பான்மையானோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
