4 குழந்தைகளை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட தாய் 20 வருடங்களுக்கு பிறகு விடுதலை

தனது 4 குழந்தைகளை கொன்றார் எனக் கூறப்பட்டு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய், இரண்டு தசாப்தங்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு இன்று மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.

1989 மற்றும் 1999 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இவர் குழந்தைகளைக் கொலை செய்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்த குற்றத்துக்காக 2003 ஆம் ஆண்டில் Kathleen Folbigg இற்கு 40 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், இக்குழந்தைகள் இயற்கையான காரணங்களால் உயிரிழந்திருக்கலாம் என தற்போது வெளியாகியுள்ள அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே, இவருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான யோசனை சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ளது.

4 மரணங்களிலும் தாயின் பங்களிப்பு குறித்தும் சந்தேக நிலை எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles