நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா, கண்டி உட்பட சில மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்துவருகின்றது.










