5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது!

மஹியங்கனை, செரானதொட்ட பகுதியில் 5 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களை வைத்திருந்த நபர் ஒருவரை கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் தலைமை அதிகாரி பொலிஸ் சார்ஜன்ட் ஜயசேகரவுக்கு கிடைத்தப் பெற்ற இரகசிய தகவலின் அமைய குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேகநபரிடம் இருந்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான 5 ஆயிரம் ரூபாய் எட்டு நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​அவர் கிரிபத்கொட அங்குலான பஸ் ஒன்றின் நடத்துனராக கடமையாற்றுவதாகவும், நாணயத்தாள்கள் அந்த பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரால் தமக்கு வழங்கப்பட்டதாக சந்தேக நபர் பொலிஸாரும் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles