6 ஆம் திகதி மாலை முதல் பெறுபேறு! 7 இல் விருப்பு வாக்கு முடிவு!!

முதலாவது தேர்தல் பெறுபேறு ஆகஸ்ட் 6 ஆம் திகதி மாலை 4 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை (05) முடிவடைந்ததும், நாளை மறுதினம் (06) காலை முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். இதற்கமையவே முதல் முடிவு மாலை 4 மணியளவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், விருப்பு வாக்கு பெறுபேறு ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles