70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை வில்லைகளுடன் ஒருவர் கைது!

முகத்துவாரம் மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஒரு தொகை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு வடக்கு குற்றவிசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 78,700 போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் இந்த போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமான முறையில் வான் மற்றும் கடல் மார்க்கமாக கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles