இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் ஏழாம் திகதி வரை பல்வேறு நாடுகளிலிருந்தும் 70,633 உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 13,547 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் ஒக்டோபர் மாதத்தில் அந்த எண்ணிக்கை 22,771 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நேற்றுடன் முடிவடைந்த ஒரு வார காலத்தில் 9,454 உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாகவும் இக்காலங்களில் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் நாட்டுக்கு வருகை தருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, ஜேர்மன், கனடா, பிரான்ஸ், பாகிஸ்தான், மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்தே இக்காலங்களில் அதிகளவு உல்லாசப் பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரை 70,633 உல்லாசப் பிரயாணிகள் நாட்டு வருகை தந்துள்ளதாகவும் தொடர்ந்து அந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.