75ஆவது வரவு – செலவுத் திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. ஏதோ, பட்ஜட்டில் அதற்கான நிதியை தாமே ஒதுக்கி தீர்வை தருகின்றோம் என பாசாங்கு காட்டியுள்ளது. பட்ஜட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கென எவுதும் ஒதுக்கப்படவில்லை.
ஆயிரம் ரூபாவை வழங்குமாறே யோசனை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. கம்பனிகளே அது பற்றி முடிவெடுக்கவேண்டும். அறிவிப்பை மாத்திரம் விடுத்து இதுவிடயத்தில் அரசாங்கம் நழுவியுள்ளது. ” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.










