கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் நேற்று (25) காலை உயிரிழந்த 70 வயதான நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் 16ஆவது மரணம் நேற்று பதிவானது.
கொழும்பு 2 பகுதியை சேர்ந்த ஒருவரே கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார்.
அவரது இரத்தத்தில் கிருமி தொற்று காணப்பட்டமையினால் உடலில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.
3 ஆயிரத்து 803 பேர் குணமடைந்துள்ளனர். 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
4 ஆயிரத்து 503 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.