8 மாதங்களில் மத்திய மாகாணத்தில் 6 சிறுத்தைகள் உயிரிழப்பு!

இவ்வருடத்தில் கடந்துள்ள 8 மாதங்களில் மாத்திரம் மத்திய மாகாணத்தில் 6 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளன.

மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் போடப்படும் கம்பி வலையில் சிக்குண்டே இவை உயிரிழந்துள்ளன.

நாவலப்பிட்டிய, கம்பளை, புஸல்லாவை , மஸ்கெலியா மற்றும் நல்லதண்ணி ஆகிய பகுதிகளிலேயே வலையில் சிக்கி சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன என்றுநல்லதண்ணி வனத்துறை அதிகாரி பிரகாஸ் கருhதிலக்க கூறினார்.

கடந்த 8 மாதங்களில் வலையில் சிக்கிய 5 சிறுத்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். உயிரிழந்துள்ள 6 சிறுத்தைகளில் கருஞ்சிறுத்தையொன்றும் உள்ளடங்குகின்றது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

Related Articles

Latest Articles