ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறவிருந்த இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு, எதிர்வரும் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஆளுங்கட்சி பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 35 இராஜாங்க அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.










