யானை மிதித்து இளம் குடும்ப பெண் பலி: மன்னாரில் சோகம்!

மன்னார், மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காகத் தொழில் செய்யவந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மரண விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,

வவுனியாவில் வசித்து வந்த குடும்பம் ஒன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மன்னார், மடு பொலிஸ் பிரிவிலுள்ள கட்டையடம்பன் பகுதிக்குத் தொழில் நிமித்தம் வந்துள்ளனர். இவர்கள் தங்கள் நண்பன் ஒருவரின் காணியில் தோட்டம் செய்து வந்துள்ளனர்.

சம்பவம் அன்று இரவு வீட்டின் வளவுக்குள் சத்தம் கேட்டதும் இவர்கள் எழும்பிப் பார்த்தபோது யானை ஒன்று வளவுக்கள் நின்றதைக் கவனித்துள்ளனர்.இந்த யானை யன்னல் அருகே வந்துள்ளது. இவர்கள் ஒரு குழந்தையுடன் இருந்த மையால் வீட்டை விட்டு வெளியேற முற்பட் டுள்ளனர். உடனே இவர்கள் அறையிலிருந்து வெளியேறுவதற்கு அவர்களின் வீட்டில் இரண்டு பாதைகள் காணப்பட்டுள்ளன.

அதில் ஒன்று வெளிச்சம் உள்ள பாதையாகவும், மற்றது இருட்டுள்ள பாதையாகவும் இருந்தது. இவர்கள் இருட்டுள்ள பாதையால் குடும்பமாக வெளியேறியுள்ளனர். அப்போது மரணித்த குடும்பப் பெண்ணான கே.டபிள்யூ. ஆராச்சி வியன்சேலாக்கே கயனி மதுவயந்தி குமாரி (வயது 29) பாதையில் தடுக்குப்பட்டு வீழ்ந்ததும் இருட்டுக்குள் நின்ற யானை அவரின் மேல் மிதித்தே மரணம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரண விசாரணையை மரண விசாரணை அதிகாரி ஏ.ஆர்.நசீர் மேற் கொண்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles