பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கும் பிரேரணையே சம்பள நிர்ணய சபைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
அவ்வாறான யோசனை முன்வைக்கப்படின் அதற்கு அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் முழு ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறினார்.
ஆயிரத்து 700 ரூபா என்பதற்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்ககூடாது, ஜீவன் தொண்டமானால் 1, 700 ரூபாவால் வாழ முடியுமா? வடிவேல் சுரேசுக்கு நாளொன்றுக்கு 1,700 ரூபா வழங்கினால் போதுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, 1,700 ரூபா என்ற கோரிக்கையை ஒதுக்கிவைத்துவிட்டு, அடிப்படை நாட்சம்பளமாக 2 ஆயிரம் ரூபா அவசியம் என்ற யோசனை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
