மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குவதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய முடிவை எடுப்பார் – என்று தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் நலனைக்கருதியே ஜனாதிபதியின் முடிவு அமையும் எனவும் அவர் கூறினார்.
“ 2020 ஆம் ஆண்டிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது 4 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மீண்டும் வருமாறு அழைப்பு விடுத்தேன்.
அதற்கு நிறுவனங்கள் உடன்படவில்லை.அதன்பின்னரே சம்பள நிர்ணயசபை கூட்டப்பட்டது. அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா கோரப்பட்டுள்ளது. இதனை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரியவில்லை.” – எனவும் அமைச்சர் கூறினார்.










