கொவிட் 19 வைரஸ் பரவல் குறித்த நெருக்காடியான சந்தர்ப்பத்திலும் ஊவா மாகாணத்தில் வாக்களித்த அனைத்து தமிழ் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றித் தெரிவித்துள்ளார்.
ஆளும் மற்றும் பொதுத் தேர்தலின் பின் அமையபோகும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் பலம்வாய்ந்த அமைச்சுப் பதவியை இ.தொ.காவுக்கு பெற்றுக்கொடுக்கும் முகமாக ஆசிரியர் சமூகம் பொதுஜன பெரமுனவின் தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து பூரண ஆதரவை வழங்கியுள்ளது.
ஊவாவில் குறைப்பாடாக காணப்படட விஞ்ஞானப் பாடசாலையை உருவாக்கி வைத்தித்துறை கற்க பெருந்தோட்டப் பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தது போன்று கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, மாத்தளை என பெருந்தோட்ட சமூகம் பரந்தப்பட்டளவில் வாழும் அனைத்து மாவட்டங்களிலும் கணித விஞ்ஞானக் கல்லூரிகளை அமைத்து அங்கும் பல வைத்தியர்களை உருவாக்க நடவடிக்கையெடுக்கப்படும்.
நான் செய்வதை மட்டுமே சொல்வேன். அதேபோன்று சொல்வதை மற்றுமே செய்பவன். ஏனைய அரசியல் வாதிகள் போன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுபவன் அல்ல. புதிய அரசாங்கம் அமைய பெற்றதும் முதல் பணியாக ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை செய்துமுடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.