புதையல் தோண்டிய எட்டு பேர் கைது!

மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மற்றும் பூஜை பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்த சந்தேக நபர்களை நேற்றைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 4 ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 50, 45, 37, 38 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் அவர்களில் நால்வர் மஹியங்கனை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் கொட்டாவ, காலி, நெலுவ மற்றும் எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சொரபொர பாடசாலை ஒன்றுக்கு பின்புறம் உள்ள காணியில் புதையல் தோண்டுவதாக குற்ற தடுப்பு பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போசா ஜயசேகரவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.எஸ்.பி.பலிபான மற்றும் மஹியங்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டபிள்யூ.டபிள்யூ.எம்.விஜேரத்ன, குற்ற தடுப்பு பிரிவுவின் பொறுப்பதிகாரி போசா ஜயசேகர (8165) போகோ பிரேமரத்ன (81362), போகோ சம்பத் (71531), போகோ துமிந்த (82939), போகோ குலவம்ச (104331) ஆகியோர் கபோகோ மலிகா (9121) ஆகியோருடன் இணைந்து குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles