‘கொட்டகலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை’

கொட்டகலை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

கொட்டகலை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளே இவ்வாறு 5 தனியார் கல்வி நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் 14 மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து ஆசிரியருக்கும், நிர்வாகத்தினருக்கும் சுகாதார பரிசோதகர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

பாடசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதிலும், பிரத்தியேக வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுகாதார அறிவித்தல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles