மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்சிவிக், எமலினா தோட்டத்தில் நேற்று (25) பிற்பகல் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
32 வயதுடைய கோவிந்தன் கமல் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளிக்கச்சென்ற இளைஞர் நீண்டநேரம் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இதன்போதே ஆற்றில் சடலம் கிடந்துள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சடலம் கிளங்கன் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டது.
மரண பரிசோதனை முடிவு இன்று வெளிவரவுள்ளது.
மஸ்கெலியா நிருபர் பெருமாள், சாமிமலை நிருபர் – ஞானராஜ்