பதுளையில் விபத்து: மூவர் காயம்!

பதுளை, தென்னேபங்குவ பிரதான வீதியில் வெந்தேசி வத்தை பகுதியில் லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான லொறியில் பயணித்த மூவரும் கந்தகெட்டிய 21 ஆம் கட்டையை சேர்ந்த நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என பதுளை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளை பதுளை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles