2020 பொதுத்தேர்தலில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றார். இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்காக இது அமைந்துள்ளது.
அதற்கு முன்னர் 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 லட்சத்து 566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த சாதனையையே மஹிந்த 2020 இல் முறியடித்தார். 5 லட்சத்துக்கு மேல் விருப்பு வாக்குகளைப் பெற்ற இரு அரசியல் வாதிகள் மஹிந்த, ரணில் ஆவார்கள். இருவரும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
தேசிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை களமிறங்கியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இச்சாதனையை முறியடிக்கும் வகையில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தேசிய மக்கள் சக்தி விருப்பு வாக்குக்கு முன்னுரிமை வழங்காததால் மஹிந்தவின் சாதனை தொடரக்கூடிய சாத்தியமும் உள்ளது.