நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 521 கொரோனா தொற்றாளர்களில் 342 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அத்துடன் கண்டி மாவட்டத்திலும் 91 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் 81 பேருக்கும் வெலிக்கடையில் 73 பேருக்கும் தெமட்டகொடவில் 59 பேருக்கும் மருதானையில் 38 பேருக்கும் மட்டக்குளியில் 31 பேருக்கும் வெள்ளவத்தையில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 44 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அம்பாறையில் 17 பேரும் கம்பஹாவில் 11 பேரும் புத்தளத்தில் 04 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் புத்தளத்தில் 03 பேரும் நுவரெலியா மற்றும் இரத்தினபுரியில் மேலும் 02 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
