புதிய சபாநாயகராக நிஹால் கலப்பத்தி?

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி கூடும்போது அவர் சபாநாயகராக ஏகமனதாக தெரிவுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், பிரதி சபாநாயகர் பதவி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles