செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (9) சிறுவர்களின் 8 என்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஒரு என்புக்கூட்டின் மேல் இருந்து நாணயக் குற்றி ஒன்றும் சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை சிசுவின் என்புக்கூட்டுத் தொகுதி ஒன்று உட்பட 9 என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 20ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன்போது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்களுடைய 8 என்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 என்புத்தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மேலும் சிசுவின் என்புக்கூடு உட்பட 9 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை இன்றைய அகழ்வு பணியின்போது என்புக்கூடொன்றின் மீதிருந்து நாணயக்குற்றி ஒன்று மீட்கப்பட்டு, சான்றுப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின்போது 327 மனித என்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 311 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.










