‘நல்லாட்சியில் மலையகம் புறக்கணிப்பு’

மலையகத்தில் ஐம்பதாயிரம் வீடுகள் கட்டப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி ஆட்சிபீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் எத்தனை வீடுகளை மக்களுக்கு கையளித்தது – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

மலையக இளைஞர்களுக்கு எத்தனை அரச வேலைவாய்ப்புகளை வழங்கினார்கள்? அரச வேலைவாய்ப்புகளில் மலையக இளைஞர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டனர், எவ்விதமான காத்திரமான அபிவிருத்திகளும் மலையகத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

இப்படியிருக்கையில் அவர்களுக்கு எந்த நம்பிக்கையில் மீண்டும் மக்கள் வாக்களிப்பார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Related Articles

Latest Articles