கடந்த வருடம் தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பங்களாதேஷின் அவாமி லீக் கட்சி, ஹசீனாவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஆடியோவில் ஷேக் ஹசீனா இந்தக் குற்றச்சாட்டினை வைத்துள்ளார்.
“நானும், ரெஹானாவும் உயிர் பிழைத்தோம். வெறும் 20 – 25 நிமிடத்தில் மரணத்தில் இருந்து தப்புpனோம். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நடந்த மாணவர் புரட்சியால் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்தப்பட்டார்.
மாணவர்களின் போராட்டாத்தின் தீவிரத்தால், 2024 ஆகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா பங்களாதேஷில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பதவி விலக மறுத்த நிலையில் நடந்த போராட்டத்தில் 600 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.










