புலி முத்திரையால் சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா!

” நான் புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். இல்லையேல் போட்டுத் தள்ளுங்கள்.” – என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஆவேசம் பொங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தனக்கு நேரம் ஒதுக்கப்படாமை தொடர்பில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் கூறியவை வருமாறு,

” நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 64 நாட்கள் கடந்துள்ளன. மக்கள் பிரதிநிதியான எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை. இது தொடர்பில் முறைப்பாடு முன்வைத்து, 36 நாட்களுக்கு பிறகே சிறப்புரிமை பிரச்சினையை எழுப்புவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 64 நாட்கள் கதைப்பதற்கு இடமளிக்காமல் இருப்பது அரசாங்கத்தின் வெட்கம்கெட்ட செயலாகும்.

இந்த அரசாங்கத்துக்கு எனது மனதால் கொடுக்கும் சகல ஆதரவையும் இன்றிலிருந்து (நேற்று) விலக்கிக்கொள்கின்றேன். இனி உண்மையான எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்படுவேன்.

எனக்கு எதிராக 24 வழக்குகள் போடப்பட்டுள்ளன. நான் வைத்தியராக இருந்தபோது ஒருவழக்குகூட போடப்படவில்லை. இவை தனிப்பட்ட ரீதியில் போடப்பட்ட வழக்குகள் அல்ல. ஊழல், மோசடிகளுக்கு எதிராக கதைக்கபோய் விழுந்தவையாகும்.

எனக்கு புலி முத்திரை குத்தப்படுகின்றது. புலி என்றால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் துப்பாக்கிச்சூடு நடந்துங்கள். நீங்கள் கொலை செய்துள்ளீர்கள். 80 காலப்பகுதியில் இவர்கள் (ஜே.வி.பி) கொலை செய்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். என்னையும் கொல்லுங்கள். எனக்கு இன்றுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. என்னை எவராவது கொன்றால் இந்த அரசாங்கம்தான் பொறுப்பு கூறவேண்டும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles