இதொகாவின் 62 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் நிகழ்வு கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம்(07) இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.

2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கும், பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வானது, பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன்தொண்டமான் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேச சபைகளிலும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை, ஆகிய நகர சபைகளிலும், நுவரெலியா மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.

மேலும், வலப்பனை பிரதேச சபையில் கதிரை சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.

பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை, எல்ல, ஹாலிஎல ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட அதேவேளை, ஹல்துமுள்ள, ஹப்புதலை, லுனுகலை ஆகிய பிரதேச சபைகளில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 5 உறுப்பினர்கள் உள்ளடங்களாக 9 உறுப்பினர்களையும் மொத்தமாக பதுளை மாவட்டத்தில் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்தை பொறுத்தவரையில் மாத்தளை, இரத்தோட்டை, அம்பன்கங்ககோரளை ஆகிய பிரதேச சபைகளிலும், மாத்தளை மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு மொத்தமாக 6 உறுப்பினர்களை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்தில் பன்வில, உடபலாத்த, பாத்தஹேவாஎட்ட ஆகிய பிரதேச சபைகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 4 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் தொலைப்பேசி சின்னத்தில் போட்டியிட்டு 1 உறுப்பினரையும், இரத்தினபுரி மாவட்டம் காவத்தை பிரதேச சபையில் 1 உறுப்பினர் உள்ளடங்களாக மொத்தமாக ஆறு மாவட்டங்களிலும் 62 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நிதிச்செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர்களான கணபதி கனகராஜ், அனுசியா சிவராஜா, பிரதி தவிசாளர் ராஜதுரை மற்றும் கட்சியில் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளடங்களாக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles