கினிகத்தேனயில் விபத்து: பெண் பலி!

கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹாமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொழும்பில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று, லொறியொன்றை முந்தி செல்ல முற்பட்டவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண், லொறியின் பின் சக்கரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்தவர் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கினிகத்தேன பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா

Related Articles

Latest Articles