நாட்டை காத்த படையினர் போர்க்குற்றவாளிகளா? நாமல் கொதிப்பு!

” புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டினார்.

‘ வடக்கில் அப்பாவி இளைஞர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகளை தொங்கவிடுவதற்கு நிதி வழங்கிய டயஸ்போராக்களை மிகப்பெரிய முதலீட்டாளர்களாகக் கருதும் அரசு, போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை குற்றவாளியாகப் பார்க்கின்றது. முன்னாள் கடற்படை தளபதி சிறையில் உள்ளார்.

புலிகள் அமைப்பை ஊக்குவித்தவர்கள் இன்று முதலீட்டாளர்கள், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்தவர்கள் போர்க்குற்றவாளிகளாகியுள்ளனர்.” எனவும் நாமல் விசனம் வெளியிட்டார்.

புலிகளால் செய்ய முடியாமல்போன கலாசார சீரழிவை தற்போதைய அரசாங்கம் செய்கின்றது. அதனால்தான் பாடத்திட்டத்தில் இருந்து வரலாற்று பாடத்தைக்கூட நீக்குவதற்கு முற்படுகின்றனர்.” – என நாமல் மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles