ஆட்டோ உதிரிப் பாகங்களை திருடி விற்ற இருவர் கைது!

பசறை- ஹிங்குருகடுவ வீதியில் தனியார் விருந்தகம் ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் உதிரிப் பாகங்களை திருடி விற்பனை செய்த இரு இளைஞர்களை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று  (22) இரவு இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட உதிரிப் பாகங்கள் அம்மனிவத்தை மற்றும் பங்குவத்தை பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பசறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உதிரிப் பாகங்களை மீட்டுள்ளதோடு சந்தேக நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பசறை நகருக்கு அண்மையில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

பசறை நிருபர்கள்

Related Articles

Latest Articles