” மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தலை இலங்கை நடத்த வேண்டுமென ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” குறித்தொகுக்கப்பட்ட காலத்தில் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் கால எல்லை பற்றி எனக்கு உறுதியாக கூறமுடியாது. அதற்குரிய சட்டதிருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும்.” – என்றார் அமைச்சர்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
‘அச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும். அதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமும் மறுசீரமைக்கப்படும்.” – என்றார் .