” ஐதேகவின் தற்போதைய தலைவர் உட்பட கட்சியிலுள்ள அனைவரினதும் இணக்கப்பாட்டுடன் கட்சி தலைமைப்பதவி ஒப்படைக்கப்பட்டால் அதனை ஏற்பதற்கு நான் தயார்.”
இவ்வாறு ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐதேக தலைமைப்பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
