” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் இறுதி முடிவு எட்டப்படும். இந்த முடிவின் பிரதி பலன் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி வரவு- செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்போது அரசாங்கத்தால் வெளியிடப்படும். ”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் சிரச தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பான பெத்திகட நிகழ்வின்போது கிட்ணன் செல்வராஜ் எம்.பி. வழங்கிய நேர்காணல் வருமாறு,
(தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது)
