பண்டாரவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் தெனிபிட்டிய , இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.
காவல்துறை, வனத்துறை, சாலை, சுரங்கம், விவசாய சேவைகள், இலங்கை போக்குவரத்து சபை, சுகாதாரம், மின்சாரம், கல்வி, விளையாட்டு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் இக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.
2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பெருந்தோட்டத் துறை மக்களுக்கு மாற்று வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
அம்மக்களை உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக தொடங்கப்படவுள்ள வீட்டுவசதிகள் இடமாற்றம் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையை செந்தில் தொண்டமான் இக்கூட்டத்தில் முன்வைத்தார்.










