ஜனநாயகம் குழிதோண்டி புதைப்பு: ஜே.வி.பி. சர்வாதிகாரம்!

“தற்போதுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நீதி நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து தற்போதைய அரசு கொண்டு வந்துள்ள புதிய முறைமை மாற்றத்தில், கொலை கலாச்சாரம் பரவலடைந்து, கொலை நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுகின்றன. தற்போது போட்டிக்கு மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று மக்களுக்குச் சேவை ஆற்ற முடியாத நிலை எழுந்துள்ளது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

“இத்தகைய சூழ்நிலைக்கு மத்தியில், அரசு பொய் சொல்லிக் கொண்டு, சமூகத்தை கொலைகாரர்கள், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் கொலையாளிகளிடம் ஒப்படைத்துள்ளது. அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகாரப் போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது. அரசை மையமாகக் கொண்ட சர்வாதிகாரக் கட்டமைப்பை உருவாக்கி, ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வெலிகம தவிசாளர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தார், ஆனாலும் இறுதியில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் அவர் கொலையாளிகளுக்குப் பலியானார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானாவுக்கும் கூட உயிருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த உயிர் அச்சுறுத்தல்களைப் பொலிஸார் வெளிப்படுத்தவில்லை. ஜகத் விதானதான் வெளிக்கொணர்ந்தார். இது குறித்து ஜகத் விதான பேசும்போது, பொலிஸ்மா அதிபர் நேரடியாகவே அவரைக் குற்றவாளியாக்கியுள்ளார்.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு அரசே பொறுப்பு. பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அறிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏதேனும் நடந்தால், அரசே பொறுப்புக் கூற வேண்டும். பொய்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கொலைகாரர்கள், போதைப்பொருள் கும்பல்கள் அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொண்டு வரும் கும்பல்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை.

இன்று சமூகத்தில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொலைக் கலாச்சாரம். மறுபக்கம் ஜே.வி.பி.யின் சர்வாதிகாரம்.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles