நுகேகொடை கூட்டத்தில் அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்பு!

நுகேகொடையில் நேற்று நடைபெற்ற கூட்டமானது அலிபாபாவும், 40 திருடர்களும் பங்கேற்ற கூட்டமாகும். இந்த ஆட்சியைக் கவிழ்க்கலாம் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். இதனால்தான் டிசம்பர் ஜனாதிபதி கதையெல்லாம் பரப்படுகின்றது என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

நாட்டில் பழைய அரசியல் கலாசாரம் நுகேகொடை கூட்டத்தில் வெளிப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாமல் ராஜபக்ச என்பவரை ஹரின் பெர்ணான்னோ இளவரசர் என விளித்துள்ளார். ஆம். அவர் கள்வர்களின் இளவரசர் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles