இலங்கையை மீளக் கட்யெழுப்பும் வேலைத்திட்டத்துக்கான ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கும், இலங்கைக்கான கனடா தூதுவருக்கும் இடையிலான சந்திப்பின்போதே இது பற்றி பேசப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அலரிமாளிகையில் நேற்று மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்து பேசப்பட்டது என்று பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
