இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கை வந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையம் வந்த அவரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க வரவேற்றார். இலங்கைக்கான இந்திய தூதுவரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
இந்திய பிரதமரின் விசேட பிரதிநிதியாக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை அவர் நாளை சந்திக்கவுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித் திட்டங்கள் பற்றி அறிவிக்கப்படவுள்ளது.
