உகண்டாவில் பதுக்கப்பட்டதாக கூறப்படும் ராஜபக்சக்களின் பணத்தை கொண்டுவாருங்கள்!

ஆபிரிக்க நாடான உகண்டாவில் ராஜபக்சக்களால் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் டொலர்களை இலங்கைக்கு கொண்டுவருமாறு அரசாங்கத்திடம், நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் தமது தரப்பில் இருந்து வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் கூறியவை வருமாறு, .

“ ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கான சிறந்த காலம் தற்போதைய காலப்பகுதியாகும்.

அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயார். சத்திய கடசாதியைக்கூட வழங்க தயாராகவே உள்ளேன்.” – என்றார் நாமல்.

அதேவேளை, தங்கள் குடும்பத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி குற்றச்சாட்டை நிரூபிக்க தவறும் பட்சத்தில் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தி இருந்தார்.

Related Articles

Latest Articles