கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹல்துமுல்ல, கலுபஹான பகுதியில் உள்ள ஒரு வளைவில் இன்று (18) காலை தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளார்.
மேலும், பல பயணிகள் காயமடைந்து தியத்தலாவ, பதுளை பொது வைத்தியசாலையிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்தமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடராஜா மலர்வேந்தன்










