தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பளத்துடன் கிடைக்கப்பெறும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2026 ஜனவரி முதல் 400 ரூபா சம்பள உயர்வு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஜனவரி மாதத்துக்குரிய சம்பளம் பெப்;ரவரி 10 ஆம் திகதியே வழங்கப்படும். இதன்போது அதிகரிக்கப்பட்ட சம்பளம் கிடைக்கப்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளமாக 1,750 ரூபாவரை கிடைக்கப்பெறும்.

 

Related Articles

Latest Articles