“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எமது கட்சிக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்படுகின்றது. எனவே, இணைந்து பயணிப்பது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள விரும்பும் பட்சத்தில் எம்முடன் எவரும் இணைந்து பயணிக்கலாம் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.










