வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட் டத்துக்கு எதிராக நெடுங்கேணி யில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் உணர்வெழுச்சி யுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நெடுங் கேணி பஸ் நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பமாகியது.
இதன்போது கிவுல் ஓயா திட்டத் துக்கு எதிராக மக்கள் கோஷங் களை எழுப்பியதுடன், பதாதைக ளையும் தாங்கியிருந்தனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து நெடுங்கேணி பிர தேச செயலகம் வரை ஊர்வலமாகக் கோஷங்களை எழுப்பியவாறு சென்றி ருந்தனர்.
அங்கும் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்புப் போராட்டத்தை நடத் தியதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வழங்கியிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பு எதிராகக் குரல் கொடுத் திருந்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்திய லிங்கம், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சாந்தி சிறிஸ்கந்தராஜா, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜன நாயகப் போராளிகள் கட்சியின் பேச்சா ளர் துளசி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்றி ருந்தனர்.










