T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (27) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo RPS மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ளது. எனவே, இன்றைய போட்டி அவ்வணிக்கு முக்கியத்துவம் இல்லை.
எனினும், நியூசிலாந்து அணிக்கு முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு தெரிவாகிவிடும். எனவே, வெற்றி முனைப்போடு நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.
